ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு..!

5 Min Read

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க , 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமரா இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் யானைகளை கண்காணிக்கும் பணியினை வனத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், மதுக்கரை முதல் கேரள மாநிலம் வாளையார் வரை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாக இரண்டு ரயில் பாதைகள் உள்ளன. கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வழித்தடம் “ஏ” லைன் என்றும், கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய வழித்தடம் “பி” லைன் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு

இந்த ரயில் பாதைகளில் தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வரும் நிலையில், இரவு நேரங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க, யானை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கபட்டது.

இதனிடைய மற்றுமொரு முயற்சியாக யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் விதமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொறுத்த வனத்துறை முடிவு செய்தது.

ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு

தமிழக அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ரயில் பாதைகளின் அருகில் 12 இடங்களில் உயர் கோபுரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வந்தது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகூ ஆகியோர் வனத்துகை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்தையும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறத்து வைத்தார்.

ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு

பின்னர் பேசிய அவர், வாளையார், ஆனைகட்டி, சோளக்கரை, இருட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகள் யானைகள் நடமாட்டம் எப்போதும் இருக்கும் எனவும், யானைகளின் வழித் தடங்கல் ஏற்படுவதன் காரணமாக மனித விலங்கு மோதல் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

யானைகள் வழித்தடத்தில் ஏற்படும் மாற்றம், அதன் உணவு முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 928 முறை வனத்தை விட்டு யானைகள் வெளியேறியுள்ளது என தெரிவித்தார். ரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பது கவலைக்குரியது எனவும், சோளக்கரை பகுதியில் இரண்டு ரயில் பாதைகளின் நடுவில் உள்ள பகுதிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருகிறது.

ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு

அவ்வாறு வரும் போது விபத்து ஏற்பட்டதில் 11 யானைகள் இரயில் மோதி உயிரிழந்துள்ளது எனவும் தெரிவித்தார். சுரங்க பாதை ஏற்படுத்தினாலும் அது நிரந்தர தீர்வு இல்லை. யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரம் கண்காணிக்க நவீன செய்ற்கை நுண்ணறிவு காமிர நிறுவ 7 கோடியே 24 லட்சம் செலவு செய்யப்பட்டு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் யானைகளை கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் 2023-ல் துவங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது எனவும், யானைகள் கடக்கும் இடங்களில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ரயில் பாதை அருகே யானைகள் வரும் போது
இந்த கேமிரா கண்காணிப்பு மையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கிறது.

ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு

அப்போது விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மூலம் விபத்தை தடுப்பது, தனிப்பட்ட யானைகளின் நடவடிக்கைகளை கண்டறிவது போன்ற பயன்பாடுகள் இந்த கேமரா மூலம் மேற்கொள்ள இயலும்.

யானைகளை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார். இந்த திட்டம் இதுவரை யாரும் அறிமுகபடுத்தாத திட்டம், மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் காக்கும் அரசு தற்போதைய அரசு என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு;-

ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு

உலகிலேயே அதிக அறிவு பெற்ற வனவிலங்காக யானை உள்ளது. மின்வேலி மற்றும் அகழி ஆகியவைகளை எப்படி கையாண்டு வனத்தை விட்டு வெளியேறுவது என நுணுக்கமாக தகவமைத்து கொள்வதில் யானை புத்திசாலியாக உள்ளது. டிரோன் மூலமும் யானைகள் நடமாட்டம் கண்டறிந்து ரயில் மோதி உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல ஆண்டுக்கு 1000 யானைகள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்கிறது. 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் யானைகள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சென்றுள்ளது. இந்த தரவுகளை வைத்து செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவத்தைத் தடுக்க முடியும்.

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

ரயில்வே துறை சார்பில் இரண்டு இடங்களில் யானைகள் கடந்து செல்லும் வழியில் தரைவழிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறையை நவீனப்படுத்தும் வகையில் ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல மாநில அளவில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும் கோவை வனச்சரகத்தில் இரண்டு யானைகள் நாள்தோறும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் அதிக சேதம் ஏற்படுகிறது.

வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகூ

அந்த யானைக்கு காலர் ஐ.டி பொருத்தி கண்காணிக்கும் திட்டம், அகழி மற்றும் வன எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Share This Article
Leave a review