ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் ஆவடி பகுதியை சேர்ந்த ராஜாராம் வயது (38) என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், திருப்பதியை சேர்ந்த ராஜேந்திரன் வயது (41) ஸ்டாக் டிரேடிங் அன்ட் ஷேரிங் தொழில் செய்து வருவதாகவும் ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் 3% சதவீதம் ஷேர் தருவதாக தன்னிடம் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும், அதை நம்பி, கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் 2023-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் வங்கி கணக்கிற்கு சுமார் ரூபாய் 1.50 கோடி வரையிலும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பி உள்ளார். அந்த பணத்தை ராஜேந்திரன் (ZERODHA ஆப் வர்த்தகம்)-ல் முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தில் ராஜாராம் வங்கி கணக்கிற்கு அனுப்புவதாக கூறி உள்ளார். அதனால் இதுவரை எந்த தொகையும் அனுப்பவில்லை. அது மட்டுமல்லாமல் இறந்து போன ராஜேந்திரன் தந்தை லட்சுமி நாரயணன் பேரிலும் மற்றும் அவர்களது இரு சகோதரிகள், அம்மா ஆகியோர்களுக்கு தெரியாமல் அவர்களது பெயரில் வங்கி கணக்கை தொடங்கி டிரேடிங் தொழில் செய்து வந்த விவரம் ராஜாரமுக்கு தெரியவந்தது.

எனவே ராஜாராம் அவரது மனைவி சுபஶ்ரீ இருவரும் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகார் மனுவின் மீது ஆவடி காவல் ஆணையர் கி. சங்கர், துணை ஆணையர் பெருமாள் அவர்களின் உத்தரவுப்படி விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சீரஞ்சீவி ஆந்திரா மாநிலம், திருப்பதிக்குச் சென்று ராஜேந்திரனை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 88 லட்சத்து 40 ஆயிரம் பணமோசடி செய்த பெண் கைது. சென்னை ராமாபுரம் பூத்தபேடு மெயின் ரோடு, அன்னை சத்யா நகரை சேர்ந்த கௌதமன் (35). இவருக்கு ராமாபுரம் நாயுடு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்த செல்வம் மற்றும் அம்பத்துரைச் சேர்ந்த நித்யா லட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில், அவர்கள் 4 பேரும் சேர்ந்து, குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகவும், அதற்கு முன்பணமாக அரசாங்கத்திற்கு 85,000 செலுத்த வேண்டும் என கௌதமனிடம் கூறியுள்ளனர். இவரைப்போல் 104 நபர்களிடம் மொத்தமாக 88 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து, மேற்கூறிய நபர்களிடம் புகைப்படம் கைரேகை மற்றும் கண் விழி அடையாளங்களை எடுத்துக் கொண்டு வேனில் ஏற்றி படப்பை அருகே பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை அடையாளம் காட்டி இது உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, பதிக்கப்பட்ட ஒப்புகை சீட்டை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் கௌதமன் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சென்னை மணலி புது நகரை சேர்ந்த லட்சுமி வயது (43), என்பவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.