கோவையில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலம் – போலீசார் விசாரணை..!

2 Min Read

கோவை பேரூரில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் சடலம் மீட்பு – காவல்துறை விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர் கடந்த ஐந்தாண்டுகளாக கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவரது மனைவி செண்பகவல்லி வயது (32).

பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலம்

ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மழலையர் தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர்களது மூத்த மகன் 5 வகுப்பு படித்து வருகிறான். மேலும் இரண்டாவது மகள் கோகுலப்பிரியா 3 வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் வசிக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதற்கு கோகுலபிரியாவை வந்து கலந்து கொள்ளுமாறு அழைத்து உள்ளனர்.

பேரூர் காவல் நிலையம்

அதற்கு அவரது தாயார் செண்பகவல்லி பிறந்த நாள் விழாவிற்கு செல்ல வேண்டாம் என கூறி உள்ளார். இருந்த போதும் கேக் வெட்டி விட்டு உடனே திரும்பி சென்று விடலாம் என கூறி குழந்தை கோகுலபிரியாவை அழைத்து உள்ளனர். பின்னர் கோகுலபிரியா பிறந்த நாள் விழாவிற்கு சென்று உள்ளார்.

ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து கோகுலபிரியாவின் தாயார் செண்பகவல்லி குழந்தையை தேடி சென்று உள்ளார். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் பக்கத்து வீட்டில் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து உள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை

அப்போது அதில் குழந்தை கோகுலபிரியா மிதந்து கொண்டு இருந்தார். உடனே குழந்தையை வீட்டுக்காரர் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது குழந்தையை பரிசோதித்து மருத்துவர்கள் குழந்தை கோகுலபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் தீவிர விசாரணை

அதை தொடர்ந்து குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக குழந்தையின் தாயார் செண்பகவல்லி பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது மூடி கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை எப்படி விழுந்து இறந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review