இந்தியாவில் புதிதாக 3,611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

1 Min Read
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 3,962 ஆக இருந்த நிலையில் இன்று  3,611 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ்களும் அடங்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,930 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் தற்போது 33,232 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது  0.07 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.74 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 6,587 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,43,99,415 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 3,611 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 2.08% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.88% இதுவரை மொத்தம் 92.74 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,73,263 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Share This Article
Leave a review