தமிழ்நாட்டில் 29 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு – ஏப்ரல் 1 தேதி அமல்..!

1 Min Read

தமிழ்நாடு முழுவதும் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதனால் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

தற்போது சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு – ஏப்ரல் 1 தேதி அமல்

அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு – ஏப்ரல் 1 தேதி அமல்

இந்த நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு – ஏப்ரல் 1 தேதி அமல்

அதன்படி இந்தியாவில் உள்ள 566 சுங்கச்சாவடிகளில் 460 சுங்கச்சாவடிகளில் உள்ள இந்த கட்டணம் உயர்வு அமலாகியுள்ளது.

Share This Article
Leave a review