சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு இரண்டு புதிய வால்வோ சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. ரூபாய் 3 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பஸ்களையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடியரசு தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை கடந்த 1971 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா பஸ் சேவைகள், சுற்றுலா பயண திட்டங்கள், ஹோட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரில் உணவு விடுதிகள், படகு குழாய்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

சுற்றுலா பயணத் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்கள், உயர்தர சொகுசு பஸ்கள், சாதாரண சொகுசு பஸ்கர் 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பஸ்கள் என மொத்தம் 14 சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023 – 2024 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் திருப்பதி சுற்றுலா மற்றும் பிற சுற்றுலாக்களை இயக்குவதற்கு ஏற்படும் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்ய இரண்டு குளிர்சாதன வால்வோ சொகுசு பஸ்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூபாய் இரண்டு கோடியே 92 லட்சம் மதிப்பில் இரண்டு வால்வோ சொகுசு சுற்றுலா பஸ்களின் பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.
சுற்றுலா பஸ்களை தொடங்கி வைக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் வரும் பூந்தமல்லி பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தாம்பரம் சானிடோரியம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தாம்பரம் சானிடோரியம் அறிவுசார் குறையுடையோருக்கான அரசு நிறுவனத்தின் சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் இந்த பஸ்ஸில் பயணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான மாமல்லபுரத்துக்கு இந்த 60 மாணவ, மாணவிகளும் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன், மகளிர் உரிமைதுறை அமைச்சர் பி. கீதா ஜீவன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் க. மணிவாசன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குனர் கமல் கிஷோர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.