ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது.! பெண்களுடன் உல்லாசமாக இருப்பது..!

2 Min Read

பெரம்பலூரில் மாயமான மாற்றுத்திறனாளி ஆசிரியை கதி என்ன வென்று தெரியவில்லை. அதே நாளில் மயமான சக ஆசிரியர் ஊர் ஊராக சுற்றி பல பெண்களுடன் உல்லாசம் இருந்து வருவதாக வந்த தகவலின் பேரில் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .

- Advertisement -
Ad imageAd image

பெரம்பலூர் மாவட்டம், வி. களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியரை தீபா வயது 42 மாற்றுத்திறனாளியான இவர், தனது கணவரான இன்ஜினியர் பாலமுருகன் பயன்படுத்திய காருடன் கடந்த நவம்பர் 15ஆம் தேதி திடீர் மாயமானார். அதே பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியரான வெங்கடேசனையும் வயது 44 அன்று முதல் காணவில்லை. இதில் இரண்டு பேருக்கும் தகாத உறவு காரணமாக இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தாரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மற்றும் வி. களத்தூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள்

இந்த நிலையில் கோவை பகுதியில் அனாதையாக நின்ற தீபா பயன்படுத்திய காரை மீட்டு, போலீசார் பெரம்பலூர் கொண்டு வந்தனர். காரில் ரத்தக் கறை படிந்த சுத்தியல் இருந்ததால் ஆசிரியை தீபாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்குமோ? என போலீசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. பெரம்பலூர் எஸ்.பி ஷ்யாமளாதேவி உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. கோவையில் பதுங்கி இருந்தபோது ஆசிரியர் வெங்கடேசன் தனது செல்போனில் இருந்து தொடர்பு கொண்ட பாலியல் புரோக்கர் ஆன கோவை மந்தக்கரை காந்தி நகரை சேர்ந்த மோகன் என்பவரை பெரம்பலூர் அழைத்து வந்த வி. களத்தூர் போலீஸ் கடந்த 3ஆம் தேதி பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். இது பற்றி தனிப்படை போலீசார் கூறுகையில்; மாயமான ஆசிரியர் வெங்கடேசன் தனது இருப்பிடத்தை போலீசார் அறிந்து விடுவார்கள் என அப்போது சிம் கார்டுகளையும் தான் பதுங்கி இருக்கும் இடத்தையும், மாற்றி மாற்றி வருகிறார்.

வி. களத்தூர் காவல் நிலையம்

இதனால் அவரே நெருங்குவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏ.டி.எம் களில் வெங்கடேசன் பணம் எடுத்தபோது அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே பதிவாகியுள்ளார். தலைமறைவாக உள்ள ஆசிரியர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசும் எண்களின் உரிமையாளர்களை நெருங்கி விசாரிக்கும் போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரியவந்தது. தலைமறைவு ஆசிரியர் அப்பொழுது ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்து பாலியல் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.

ஆசிரியை மாயமான சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியர் தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரைப் பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக தெரிவித்தனர்.

Share This Article
Leave a review