தமிழ்நாட்டிற்கு பெருமை ஏற்படுத்திய விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு ரூபாய் 25 லட்சம் பாராட்டுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில் அறிவித்தார்.
விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு ரூபாய் 25 லட்சம் பாராட்டுத் தொகையை வீரமுத்துவேல் தான் படித்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு பரிசாக பகிர்ந்து அளித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டில் இருந்து வரும் விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விழாவில் பேசும் போது சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி, கொடிகட்டி பறப்பதாகவும், சந்திராயன் 3 திட்ட இயக்குனராக தமிழ்நாடு விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் இருந்தது, பெருமை அளிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திய விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் மற்றும் விஞ்ஞானியான 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில் அறிவித்தார். அதன்படி நேற்று விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் மற்றும் விஞ்ஞானியான 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த வீரமுத்துவேல் தனக்கு வழங்கப்பட்ட ரூபாய் 25 லட்சம் பரிசு தொகையை, தான் படித்த பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

அதன்படி, தான் படித்த விழுப்புரம் மாவட்டம், ஏழுமலை பாலிடெக்னிக் மற்றும் தாம்பரம் மாவட்டம், சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மாவட்டம், என்.ஐ.டி மற்றும் சென்னை மாவட்டம், ஐ.ஐ.டி கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூபாய் 25 லட்சத்தை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள்ளார். இதனை தொடர்ந்து விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.