முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மிக்ஜம் புயல் பாதிப்பு பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜம் புயலினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு, வரும் மீட்பு பணிகள் குறித்தும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மிக்ஜம் புயல் பாதிப்புகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார். தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். என்றும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரே தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கைகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்றுக்கொண்டார் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.