Tiruppur : பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இரட்டை சகோதரிகள் – குவியும் பாராட்டு..!

1 Min Read
பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டை சகோதரிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் மாவட்டம், அருகே அவிநாசியில் உள்ள சூளை பகுதியில் இருக்கும் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகமணி (39). இவரது கணவர் முத்துக்குமரன் கடந்த 10 ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார். முருகமணி பனியன் கம்பனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

அடுக்குமாடி குடியிருப்பில் எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ என இரட்டையர்களான மகள்களுடன் வசித்து வருகிறார். எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள், அவிநாசியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

அப்போது வெளியான 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவில் இரட்டையர் சகோதரிகள் இருவரும் 484 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;-

10 ஆம் வகுப்பு பொதுதேர்வு

காலை 4 மணி முதல் படித்தும், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், அம்மாவின் அரவணைப்பு மற்றும் ஊக்கத்துடன் நன்றாக படித்து நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண்களை பெற்றுள்ளோம்.

மேலும் மேற்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வோம் என்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்

சிறுவயதிலேயே தந்தையை இழந்து பணியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வரும் தாயின் அரவனைப்பில் வளர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இரட்டை சகோதரிகளான இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று தாய்க்கு பெருமை சேர்த்தது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review