Tiruppur : கோடை வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழற்கூரை – திருப்பூர் மாநகராட்சி..!

1 Min Read
கோடை வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழற்கூரை - திருப்பூர் மாநகராட்சி

திருப்பூரில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க மாநகராட்சி சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற நாட்களில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு இருக்கும் எனவும், திருப்பூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழற்கூரை – திருப்பூர் மாநகராட்சி

கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில், புதுச்சேரியில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

அதை முன் மாதிரியாக கொண்டு தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் தற்போது பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழற்கூரை – திருப்பூர் மாநகராட்சி

மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பச்சை திரை கொண்ட மேற்கூரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிக்னல்களிலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழற்கூரை – திருப்பூர் மாநகராட்சி

இதனால் சிக்னலில் இரண்டு நிமிடம் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடிவதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article
Leave a review