புதுச்சேரியில் வீட்டருகே உள்ள கல்லூரி மாணவரின் பிரச்சனையை பேசி தீர்க சென்ற வாலிபரை அண்ணன் தம்பி சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி திலாசுபேட்டை பகுதியை சேர்ந்தவர் கிஷோர் வயது (27). இவர் மீது கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கல்லூரி மாணவரான வெற்றி, கல்லூரியில் வெற்றிக்கும் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த சகோதர்களான அமீர்கான் (நடன கலைஞர்) மற்றும் ஷாருக்கானுக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதனால் வெற்றிக்கும் அமீர்கான் மற்றும் ஷாருக்கானுக்கும் முன்விரதம் காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கிஷோரை வெற்றி அமிர்கான் வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் பேசி கொண்டிருந்த போது திடிரென்று தகராறு ஏற்பட்டதில், கிஷோரின் தாயை சகோதரர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கிஷோர் அமிர்கானை தாக்கியுள்ளார். இதனை கண்ட அவரது தம்பியான ஷாருக்கான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, கிஷோரை சரமாரியாக வெட்டி உள்ளார்.
அப்போது அமிர்கானும் அருகே இருந்த இரும்பு கம்பியால் கிஷோரை தாக்கியதில் அடுத்து அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் கீழே சரிந்துள்ளார். இதனை அடுத்து சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வெற்றி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கனகன் ஏரி அருகே பதுங்கி இருந்த சகோதர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணைக்கு பிறகே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தகவல்.