அனைவருக்கும் அரசாங்கம் வழங்கக்கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் இவர்களுக்கு எல்லாம் யார் இந்த அதிகாரத்தை தந்தது. எங்கெங்கெல்லாம் அத்துமீறல்கள் நடைபெறுகிறதோ அதை எல்லாம் மக்கள் பார்வைக்கு கொண்டு வரும் பணியினை செய்து வருபவர்கள் பத்திரிகையாளர்கள். இதற்கு GO போட்டு உள்ளதா என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளாரா இதுபோன்ற கேள்விகள் பத்திரிகையாளர் மத்தியில் எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்ன செய்வது என்று விழி பிதுங்கி உள்ளனர். பத்திரிகையாளர் மீது இதுபோன்ற நடவடிக்கை அரசு எடுக்குமேயானால் அரசு மீது பத்திரிக்கையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதே பத்திரிக்கையாளர்கள் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

செய்தியாளர்கள் யாரிடம் முறையிடலாம் என்று முடிவு செய்து முறையிட செல்கின்ற போது அதிகாரிகளை சந்திக்க பெரும் தடையாக உள்ளனர் காவல்துறையினர். இதற்கு அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏராளம், செய்தி மக்கள் தொடர்பு துறையில் அலுவலரை சந்திக்க செல்கின்ற பொழுதும் கூட பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை தான் இன்றும் தலைமைச் செயலகத்தில் உள்ளது.
பத்திரிக்கை துறையில் இருக்கும் நிலைமையை செய்தித்துறை இயக்குனரை நேரில் சந்தித்து எடுத்துக் கூற முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் வெட்கக்கேடானது. இதை கேட்டாள் தலைமைச் செயலக அதிகாரிகள் உத்தரவு என்று சொல்லுகிறார்கள். பத்திரிகையாளர்கள் அனைவரும் அரசு வழங்கக்கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று அதிகாரப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர் தலைமைச் செயலக காவலர்கள்.
காரணத்தை கேட்டோம் அங்கு இருக்கும் காவலர்கள் அமைச்சரை பாக்க செல்கிறேன் என்று அங்கு போய் உட்கார்ந்து கொண்டு பணம் கேட்பதாக கூறியிருந்தனர். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டியது அரசு தான். அந்த கோரிக்கையை முன் வைக்க கூட அனுமதிக்காமல் இருந்தால் எப்படி என்கின்றனர் பத்திரிகையாளர்கள். அது பொது மக்களுக்கு பொருந்தும் பத்திரிகையாளர்களுக்கு எப்படி பொருந்தும் என்பது பல கேள்விகள் எழுந்துள்ளன.

தலைமை செயலக காவலர்களுக்கு இந்த அதிகாரத்தை தலைமை செயலாளராக வழங்கினார். அதற்கான ஆணை இருக்கிறதா, இங்கே சந்தேகம் பத்திரிகையாளர் மத்தியில் எழுந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் அரசு மீது நம்பிக்கை இழக்க செய்கிறது. பத்திரிக்கையாளர்களுக்கு அங்கு உள்ள காவலர்கள் யார் வருகிறார்கள்.? யாரிடம் எப்படி பேச வேண்டும் என்கிற விதிகளை மீறி நடந்து கொள்வது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை தலைமைச் செயலகத்திற்கு உள்ளே அனுப்பாமல் திருப்பி அனுப்பிய காவல்துறையின் மீது பத்திரிக்கையாளர்கள் கோபத்தில் உள்ளார்கள். தலைமைச் செயலாளர்கள் தலையிட்டு உடனடியாக இது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அரசு இதை உடனே கவனித்து அதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளரின் கோரிக்கையாக உள்ளது.