காதலித்து குடும்பம் நடத்திய கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை..!

2 Min Read

காதலித்து மணமுடித்து குடும்பம் நடத்திய கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை. மணமகன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறையில் போராட்டம்.

- Advertisement -
Ad imageAd image

தேனி மாவட்டம், அடுத்த போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் என்பவரின் 19 வயது மகள் ஹேமலதா.

காதலித்து குடும்பம் நடத்திய கணவன் மனைவி

அப்போது ஜோதிடர் சுரேஷ் தனது உறவினரான போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பெங்களூர் இஸ்ரோ மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான மணிவாசகத்தின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதை அடுத்து ஹேமலதாவிற்கும், சந்துருவிற்கும் காதல் மலர்ந்து காதலர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில் பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டி மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை

அப்போது தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில் காதலர்கள் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

பின்பு மணமகளுக்கு 19 வயதும், மணமகனுக்கு 20 வயதும் ஆனதாலும் மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடையாததாலும் புதுமண தம்பதிகள் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என குறிப்பிடதக்கது.

கோம்பை காவல் நிலையம்

மேலும் மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் முறைப்படி திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அவர்களது மகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

அப்போது சந்துருவின் பெற்றோர்கள் அவரை பெங்களூருக்கு அழைத்து சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா புகார் செய்ததை அடுத்து போலீசார் சந்துருவை தேடி வந்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அப்போது கணவனைக் காணாமல் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா போடி அருகே உள்ள சிந்தலைச்சேரியில் உள்ள தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த நிலையில் காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்தி விட்டு தலைமறைவான சந்துருவை கூட்டிச்சென்று பெங்களூரில் மறைத்து வைத்துள்ள இஸ்ரோவில் பணிபுரையும் அவரது தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஹேமலதாவின் குடும்பத்தினர். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Share This Article
Leave a review