மாணவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற 17 வயது சிறுவன் கைது… அதிரும் திருச்சி…..

3 Min Read
உயிரிழந்த மாணவி

திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி திருச்சியில் தங்கி கல்லூரி படித்து வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்த மாணவி தினமும் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில், திடீரென ஒரு நாள் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அவருடைய தந்தை தொலைபேசி செய்த போது தொலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவரது மூத்த சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து பார்க்கும் பொழுது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு 17 வயது சிறுவன் இந்த கொலையை செய்ததாக கண்டுபிடித்து அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்கள் அழகுபாண்டி- முத்தாலம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2-வது மகள்  (வயது 18) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். திருச்சி தென்னூர் பாரதிநகரில் உள்ள தனது அத்தை  வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

அத்தை  அருகில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் தினமும் வேலைக்கு சென்று வருவதால், கல்லூரி முடிந்த பின் வீட்டில் தனியாகத்தான் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். அதேநேரம் அந்தப் பெண்ணின் அக்கா தனது கணவருடன் திருச்சியில் தான் வசித்து வருகிறார்.

சம்பவம் நடந்த சனிக்கிழமை அன்று அவரது அத்தை காலையிலேயே மளிகை கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று மாலை தந்தை அழகுபாண்டி, தனது மகளை செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

அப்போது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அழகுபாண்டி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து, அவரை அத்தை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.

இதையடுத்து அவரது அக்கா அங்கு சென்று பார்த்தபோது, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு மயங்கி கிடந்தார் அந்தப் பெண். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுத அவரது அக்கா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார்  உறவினர்களை தொடர்பு கொண்டு அவரது உடலை திருச்சிக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தினர். பின்னர் அந்தப் பெண்ணின் உடல் திருச்சி வந்ததும், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து இருக்கலாம் என்று கருதி, இதுகுறித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்தப் பெண்ணின் உறவினரான அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்துள்ளனர். இது பற்றி அறிந்த அந்த சிறுவன் நேற்று முன்தினம் மாலை  வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறான்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கியதோடு கூர்மையான ஊசி போன்ற ஆயுதத்தால் அவரது கழுத்தில் குத்தி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அவனை திருச்சி போலீசார் அடைத்தனர். ஒரு தலைக்காதலால் 18 வயது மாணவியை 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review