நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் பேர …

3 Min Read

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று திராவிட மாணவர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதை தொடந்து நீட் தேர்விற்கான முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீட் தேர்வு மோசடி

அதை தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில் 813 மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். மீதமுள்ள 48 சதவீதம் மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் இல்லாமல் உண்மையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மறுதேர்வு எழுதியவர்களின் முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதி வெளியானது.

உச்சநீதிமன்றம்

மேலும் மாணவர்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய மதிப்பெண் தரவரிசைகள் வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில், தேர்வை ரத்து செய்யக்கூடாது என மத்திய உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் முழு தேர்வையும் ரத்து செய்தால் இந்தாண்டு நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர உயர்மட்ட நிபுணர் முழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

இதனால் தேர்வை ரத்து செய்யக்கூடாது என பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழங்கு ஜூலை 8 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ரத்து முதல் முறைகேடுகள் வரை நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதிகள் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கக்கிறது. நீட் மறுதேர்வு, ரத்து உள்ளிட்ட 38 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுகிறது.

திராவிட மாணவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியவர்கள் கொண்ட அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்கிறது. நீட் மருத்துவ கவுன்சிலிங் தேதி ஒத்திவைக்கப்பட்டது,

கருணை மதிப்பெண்கள் வழங்கிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தியது உள்ளிட்ட காரணிகள் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்யக்கூடாது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது ஆகியவை இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மோடி அரசு

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கார்டூன் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாக பரிசோதனை என்ற பெயரில் அயோக்கியத்தனம் நிகழ்த்தப்படுவதாகவும் ஆனால் வடநாடுகளில் மட்டும் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் கேள்விகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள் என தெரிவித்தனர்.

திமுக

தமிழ்நாட்டு மக்களின் மாணவர்களின் இளைஞர்களின் முன்னேற்றம் அவர்களுக்கு கண்ணை உருத்துவதாகவும் தமிழகத்தின் ஆட்சியும் அவர்களுக்கு கண்ணை உறுத்துவதாகவும் மத்திய மோடி அரசை விமர்சித்த அவர்கள் திமுகவை ஒழிக்க வேண்டும் என்று செயல்படுவதாக சுட்டி காட்டினர்.

Share This Article
Leave a review