வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்..!

2 Min Read

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து குதறிய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

அதிராம்பட்டினம் சதாம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ரிஸ்வான் அலி – தஸ்லிமா தம்பதியின் 3 வயது மகன் ஆதிஸ். தஸ்லிமா சமைத்துக் கொண்டிருந்த போது தெருவில் சுற்றித்திரிந்த 3 நாய்கள், திடீரென வீட்டிற்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த சிறுவன் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளன. அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோடு தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள சதாம் நகரை சேர்ந்தவர் ரிஸ்வான் அலி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தஸ்லிமா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை

நேற்று இரண்டு குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்ற நிலையில் மூன்று வயதான ஆதிஸ் என்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவனின் தாயார் தஸ்லிமா சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தெருவில் சுற்றி திரிந்த 3 நாய்கள் திடிரென்று வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஆதிஸ் மீது பாய்ந்து கடித்து குதறின. இதைக் கண்டு சிறுவனின் தாய் கத்தி கூச்சலிட்டனர். வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த சிறுவன் அழுது துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களிடமிருந்து சிறுவனை மீட்டனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன்

வலியால் அலறித் துடித்த சிறுவனை மீட்டு அருகில் இருந்தவர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவன் ஆதிஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேவைப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலை மற்றும் கண் பகுதியில் நாய்கள் கடித்ததில் சிறுவன் வலியால் அலறித் துடித்தான்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிராம்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆதிஸ் பாதித்த வெறி நாய் கடித்து 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சம்பவத்தின் அதிர் வலைகள் அடங்குவதற்குள், இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

 

Share This Article
Leave a review