அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.

2 Min Read
அதிகாரி அங்கிட் திவாரி

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரில் இருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் பணத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், ஏன் அ,அமைச்சர்கள் வீடு,அலுவலகங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர்.

அடையாள அட்டை

அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.இதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தி இருந்தனர். தற்போது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது அமலாக்கத்துறைக்கு பயந்து.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தம்மிடம் பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரி குறித்தும் தகவல் தெரிவித்திருந்தார்.

லஞ்சம் வாங்கிய இ.டி அதிகாரியிடம் இருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் மத்திய பிரதேச பதிவெண் கொண்ட ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்துள்ளது. காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது.

அதிகாரி அங்கிட் திவாரி

அவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர். இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு இட ங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அதில் டாக்டர் ஒருவரிடம் பெற்ற பணம் இந்த ரூ.20 லட்சம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேசம் மற்றும் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லஞ்சம் வாங்கியதாக ஒரு அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Share This Article
Leave a review