விழிமா நகரில் தமிழ்நாடு வெல்டிங் கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் 3-வது மாநில மாநாடு வெகு விமர்சியாக நடைப்பெற்றன,
விழப்புரம் மாநகரில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தமிழ்நாடு வெல்டிங் கடை உரிமையாளர்கள் சங்கம் 3-வது மாநில மாநாடு விழப்புரம் மாவட்ட தலைவர் இளையராஜா தலைமையில் நடைப்பெற்றன.

அதில் மாவட்ட செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சூரிய தீபன் வரவேற்பு அளித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் பாலாஜி, மாநில பெருளாளர் மோகன் மற்றும் மாநில துணை செயலாளர் முகமது இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். அவர்கள் பேசுகையில்;-

மின்சாரம் மாணிய விலையில் வழங்க வேண்டும் என்றும், தங்கம் போல் இரும்பு விலை அதிகரிப்பதால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அரசு மானியத்துடன் வங்கி கடன் உதவி மற்றும் வீடு இல்லாமல் கஷ்டப்படும் உறுப்பினர்களுக்கு அரசின் உதவி இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும்.

GST வரியால் தொழிலாளர்கள் மிகவும் சிறமபடும் நிலைக்கு தள்ளபடும் நிலையை தகர்த்தக் கோரியும், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் சேர்க்கையை எளிமை படுத்த வேண்டும் என்றும், மாநில மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.