ஐநா கோரிக்கையையும் மீறி தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை !

2 Min Read
தங்கராஜ் சுப்பையா

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு விடுத்த வேண்டுகோளையும் மீறி தமிழர் ஒருவருக்கு , போதை பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் அரசு இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

- Advertisement -
Ad imageAd image

போதைப்பொருள் கடத்தல் மற்றும் உபயோகித்தல் சிங்கப்பூர் நாட்டில் மிகப்பெரிய குற்றமாகும் . சிங்கப்பூர் அரசு போதைப் பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளித்துவருகிறது . அதிகபட்சத்தண்டனையாக மரணதண்டனை வரி வழங்கிவருகிறது . கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்குச் சிங்கப்பூர் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது .

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்தியதாகக் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் . இந்த கடத்தலுக்கு உதவியதாகத் தமிழ் நாட்டை சேர்ந்த தங்கராஜ் சுப்பையா என்பவரையும் சிங்கப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர் .

தங்கராஜிடமிருந்து போலீசார் நேரடியாகப் எந்த போதைப் பொருட்களையும் கைப்பற்றா விட்டாலும் , போதை பொருள் கடத்தலில் தங்கராஜுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த கடத்தலை மொபைல் போன் மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . தங்கராஜ் ,  தன்னுடைய செல்போன் தொலைந்ததாகக் கூறியிருந்தார். எனினும் சிங்கப்பூர் காவல்துறையினர் இதனை ஏற்க மறுத்தனர் .

இந்த நிலையில், வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்ற சிங்கப்பூர் நீதிமன்றம் தங்கராஜின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.அதிர்ச்சி அடைந்த தங்கராஜின் குடும்பத்தார்  சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை நிருத்தி வைக்குமாறு வழக்கு தொடர்ந்தனர் . சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது.

செய்வதறியாத அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் , தங்கராஜுக்கு எதிரான மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பை நாட்டினர் . ஐநா மனித உரிமை ஆணையம் சிங்கப்பூர் அரசுக்கு போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணானது என கூறியது , மேலும் மரண தண்டனையைத் பின்பற்றும் நாடுகள் ,  மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்து , தங்கராஜின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்குமாறு சிங்கப்பூர் அரசுக்கு பரிந்துரை செய்தது .

மேலும் மரண தண்டனைகளுக்கு எதிராக இருக்கும் சமூக ஆர்வலர்களும், இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கும் அளவிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது தண்டனையை றது செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் . இந்த நிலையில் ஐநா அமைப்பின் கோரிக்கையும் மீறி தங்கராஜுக்கு இன்று சிங்கப்பூர் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியது

Share This Article
Leave a review