மேல்மலையனூரில் அதிர்ச்சி : சாலையோர மரத்தில் உடலில் காயங்களுடன் தூக்கில் வாலிபர் சடலம் – போலீசார் விசாரணை..!

2 Min Read
மேல்மலையனூரில் அதிர்ச்சி : சாலையோர மரத்தில் உடலில் காயங்களுடன் வாலிபர் சடலம் - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை அருகே உடலில் காயங்களுடன் தூக்கில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த கீழ்பெண்ணாத்தூர் வட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சுரேஷ் வயது (33).

அவலூர்பேட்டை காவல் நிலையம்

இவர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் இருந்து நெகுனி செல்லும் சாலையோர மரத்தில் ஒரு வாலிபரின் உடலில் ரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

மேலும் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மேல்மலையனூரில் அதிர்ச்சி : சாலையோர மரத்தில் உடலில் காயங்களுடன் வாலிபர் சடலம் – போலீசார் தீவிர விசாரணை

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலில் ரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது தூக்கில் தொங்கி இறந்து கிடந்தவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்தது. அப்போது மரத்தின் அருகில் கத்தி மற்றும் பீர் பாட்டில்கள் உடைந்து கிடந்தது.

முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனை

இதனால் மர்ம நபர்கள் சுரேஷை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்து, பின்னர் தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சுரேஷ் எதற்காக இங்கு வந்தார், யாருடன் சேர்ந்து மது அருந்தினார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review