அட்சய திருதியை நாளில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வீட்டில் வாங்கி வைத்தால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்த நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம், வெள்ளி, வைர நகைகளை வாங்குவர்.
அதன்படி இந்த வருட அட்சய திருதியை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் நகைகளை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலை முதலே மக்கள் நகை கடைகளில் நகைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் சிறப்பு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படுகிறது.

அதேசமயம் பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் அனைவரும் குழந்தைகள் உடன் வந்து குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நகைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் அட்சய திருதியை நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் புதுபுது டிசைன்களில் நகைகள் புதுவரவாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.