- பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் சற்று முன் காலமானார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 103 வயதாகும். பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவருக்கு கௌரவம் செய்து வாழ்த்து பெற்றுள்ளனர்.இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக தேக்கம்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சற்று முன் அவர் காலமானார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். வயது 110. அவரின் இயற்பெயர் ரங்கம்மாள். சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்தவர். அவரின் பாட்டிதான் வளர்த்துள்ளார். தொடக்கத்தில் மளிகை கடை, ஹோட்டல் கடை நடத்தி வந்தார்.
இயற்கை விவசாயி. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விவாதக்குழு உறுப்பினராக இருந்தார். திமுகவின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். கட்சி தொடர்பான நிகழ்வுகளில் ஆக்டிவாக கலந்து கொண்டார்.
பாப்பம்மாவுக்கு 20 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் குழந்தைகள் இல்லை. 100 வயதை கடந்தும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் பாப்பம்மாவுக்கு பெரியார் விருது அறிவித்திருந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது, பாப்பம்மாள் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றிருந்தனர்.