மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து.

4 Min Read
சத்தியபிரதாசாகு

வாக்காளர் பெயர் சேர்ப்பு , நீக்கல் படிவங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் : வாக்காளர் பட்டியல் 100 விழுக்காடு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் – அதிமுக , முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

- Advertisement -
Ad imageAd image

வாக்குச்சாவடி எண்ணிக்கையை அதிகரித்து , பெண் வாக்காளர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் – காங்கிரஸ்

தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தேர்ல் பணியில் , அரசுப் பணியாளர்கள் மட்டுமின்றி தனியார் பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும்- தேமுதிக

கள்ள வாக்குகளை தடுக்க , வாக்குச் செலுத்த கைரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் – ஆம் ஆத்மி

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ,

அதிமுக ஜெயக்குமார்

அதிமுக – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை தெரிவித்தோம். கடந்த காலத்தில் 18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக விண்ணப்பிக்க ஒருமுறைதான் வாய்ப்பு வழங்கப்பட்டது , தற்போது மூன்று முறை வழங்கப்படுகிறது.

வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் , நீக்கல் தொடர்பான படிவங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்குமாறு கூறினோம்.

18 வயது நிரம்பியோரில் கடந்த ஆண்டில் 30 சதவீதம் மட்டுமே சேர்த்துள்ளனர் , அவர்களை முழுமையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

நவம்பர் மாதத்தில் பெயர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகளை மட்டுமே சார்ந்திருக்காமல் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களின் பெயர்களை முழுமையாக சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கோள்ள வேண்டும்.

குடிசை மாற்று வாரியங்களில் இருப்போருக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் முறையாக வழங்குமாறு வலியுறுத்தினோம்.

தேர்தல் ஆணைய வலைதளத்தில் வாக்காளர்களின் புகைப்படங்களை இணைக்க கோரினோம்.

ஆதார் கார்டுகளை வாக்காளர் அட்டையுடன் இணைத்ததன் மூலம் 20 லட்சம் பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டது மகிழ்ச்சி , ஆனாலும் இறந்த பலரின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. முகவரி மாறிய பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் கூறியுள்ளனர்.

100 விழுக்காடு வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , வீரபாண்டி

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் , பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. சட்டமன்றம் அங்கீகரித்த கட்சிகள் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அதை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.

பார்த்தசாரதி

தேமுதிக துணைத்தலைவர் பார்த்தசாரதி

18 வயதான பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி மனு கொடுத்தால் அதை வாங்கி வைத்து கொள்கின்றனர் , ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடிகிறது.

எனவே வாக்காளர் பட்டியலில் இணைக்க மனு கொடுக்கும்போதே , விண்ணப்பித்ததற்கான படிவங்களை வழங்க வேண்டும் .

தேர்தல் பணியில் அரசுப் பணியாளர்கள் மட்டுமின்றி , தனியார் அலுவலர்களையும் நியமனம் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் நவாஸ்

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

வாக்களிக்க வருவோரில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருப்பவர்கள் பெண்கள் ,எனவே
மகளிருக்கு போதுமான வசதியை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்த வேண்டும் ,

ஒரு வாக்காளருக்கு பல இடங்களில் வாக்குகள் இருப்பதை சரிசெய்ய கோரினோம்.

ஆம் ஆத்மி- ஸ்டெல்லா

கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க , வாக்காளர்கள் கைரேகையை பதிவிட்டு வாக்கு செலுத்தும் நடைமுறையை கொண்டுவர வலியுறுத்தினோம்.

100 சதவீத வாக்குப்பதிவை எட்ட முடியாததற்கு காரணம் சில வாக்குச்சாவடிகளில் சில கட்சிக் கார்ர்கள் அடாவடியில் ஈடுபடுவதுதான். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரினோம்.

பள்ளிக் கூடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நெரிசல்களை ஏற்படுவதை தவிர்க்க தனியார் கட்டடங்களையும் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்த கோரினோம்.

இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் பள்ளி , கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்த வலியுறுத்தினோம்.

பாஜக துணைத்தலைவர் கராத்தே தியாகராஜன்

பூத் அளவில் ஏஜெண்ட்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வழங்கிய பட்டியலை தேர்தல் ஆணைய வலைதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டினோம் , அதை விரைவில் பதிவேற்ற கோரிக்கை விடுத்தோம். தேர்தல் ஆணைய நடைமுறையை பின்பற்றி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட எங்களது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தோம்.

Share This Article
Leave a review