தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி அருகே சரித்திர பதிவேடு ரவுடி மீது கார் மோதி கீழே விழ செய்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பழிக்கு பழியாக இக்கொலை நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன்
இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த ஒத்த கை ராஜா என்பவர் குறுந்தையன் மீது காரை மோதினார் .
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையனை காரில் இருந்து இறங்கி வந்த ஒத்தகை ராஜா உள்ளிட்ட இரண்டு பேர் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே குறுந்தையன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குறுந்தையன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் குறுந்தையன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
இவர்களது கொலைக்கு பழிக்கு பழியாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.