தமிழகத்தில் 39 தொகுதியில் வேட்புமனுக்கள் நிறைவு..!

3 Min Read
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியீடு

நாட்டின் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தமிழகத்தில் 39 தொகுதியில் வேட்புமனுக்கள் நிறைவு

அதேசமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் – 31, வட சென்னை – 67, தென் சென்னை – 64, மத்திய சென்னை – 58, ஸ்ரீபெரும்புதூர் – 53, காஞ்சிபுரம் – 31,

அரக்கோணம் – 44, வேலூர் – 50, கிருஷ்ணகிரி – 41, தருமபுரி – 44, திருவண்ணாமலை – 49, ஆரணி – 48, விழுப்புரம் – 31, கள்ளக்குறிச்சி – 37, சேலம் – 52, நாமக்கல் – 58, ஈரோடு – 52, திருப்பூர் – 46, நீலகிரி – 33,

மக்களவை தேர்தல்

கோயம்புத்தூர் – 59, பொள்ளாச்சி – 44, திண்டுக்கல் – 35, கரூர் – 73, திருச்சிராப்பள்ளி – 48, பெரம்பலூர் – 56, கடலூர் – 30, சிதம்பரம் – 27, மயிலாடுதுறை – 30, நாகப்பட்டினம் – 26, தஞ்சாவூர் – 36, சிவகங்கை – 39, மதுரை – 41,

விருதுநகர் – 41, ராமநாதபுரம் – 56, தூத்துக்குடி – 53, தென்காசி – 37, திருநெல்வேலி – 53, கன்னியாகுமரி – 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையம்

அதனை தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவை தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை – 49,

தென் சென்னை – 53, மத்திய சென்னை – 32, ஸ்ரீபெரும்புதூர் – 32, காஞ்சிபுரம் – 13, அரக்கோணம் – 29, வேலூர் – 37, கிருஷ்ணகிரி – 34, தருமபுரி – 25, திருவண்ணாமலை – 37, ஆரணி – 32, விழுப்புரம் – 18, கள்ளக்குறிச்சி – 21, சேலம் – 27, நாமக்கல் – 48, ஈரோடு – 47,

தமிழகத்தில் 39 தொகுதியில் வேட்புமனுக்கள் நிறைவு

திருப்பூர் – 16, நீலகிரி – 16, கோயம்புத்தூர் – 41, பொள்ளாச்சி – 18, திண்டுக்கல் – 18, கரூர் – 56, திருச்சிராப்பள்ளி – 38, பெரம்பலூர் – 23, கடலூர் – 19, சிதம்பரம் – 18,

மயிலாடுதுறை – 17, நாகப்பட்டினம் – 9, தஞ்சாவூர் – 13, சிவகங்கை – 21, மதுரை – 21, விருதுநகர் – 27, ராமநாதபுரம் – 27, தூத்துக்குடி – 31, தென்காசி – 26, திருநெல்வேலி – 26, கன்னியாகுமரி – 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 39 தொகுதியில் வேட்புமனுக்கள் நிறைவு

மேலும் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Share This Article
Leave a review