National Film Awards 2023 : ஆலியா பட், க்ரிதி சனோன், அல்லு அர்ஜுன் ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான விருதினை பெற்றனர்

3 Min Read
வஹீதா ரஹ்மான்

ஜனாதிபதி திரௌபதி முர்மு செவ்வாயன்று திரைப்பட பிரபலாமான வஹீதா ரஹ்மானுக்கு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதை வழங்கினார் மற்றும் 69 வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றபிரபலதிரைப்பட நட்சத்திரங்கள் அல்லு அர்ஜுன், ஆலியா பட் மற்றும் கிருதி சனோன் உட்பட திரை பிரபலங்களை கௌரவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களை கௌரவிக்கும் தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன.

விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், முர்மு பேசுகையில், ” சினிமா என்பது வணிகம் மற்றும் பொழுதுபோக்கிற்கு மட்டும் வரையறுக்கப்பட்ட தொழில் அல்ல. விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை பரப்புவதற்கு திரைப்படங்கள் மிகவும் பயனுள்ள ஊடகம். அர்த்தமுள்ள திரைப்படங்கள் சமூகம் மற்றும் நாட்டின் பிரச்சனைகளை சித்தரிக்கின்றன ” என்று பேசினார் .

அல்லு அர்ஜுன்

மேலும் அவர் பேசுகையில் “இந்திய சமூகத்தின் பன்முக யதார்த்தத்தைப் பற்றிய தெளிவான அறிமுகத்தை திரைப்படங்கள் நமக்குத் தருகிறது. சினிமா என்பது நமது சமூகத்தின் ஆவணம் சினிமா கலைஞர்கள் மாற்றத்தின் முகவர்கள். அவர்கள் நாட்டைப் பற்றிய தகவல்களை வழங்குகிறார்கள் மற்றும் குடிமக்களை இணைக்கிறார்கள்” .

தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றதற்காக வஹீதா ரெஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், அவர் தனது திறமை மற்றும் ஆளுமையால் திரையுலகின் உச்சத்தை எட்டியிருப்பதாகக் கூறினார்.

நான் மிகவும் பெருமையாகவும், பணிவாகவும் உணர்கிறேன் , ஆனால் இன்று நான் எதை சாதித்திருந்தாலும் அதற்கு என் அன்பான திரையுலகமே காரணம்.

ரஹ்மான் தனது விருது ஏற்புரையில் “அதிர்ஷ்டவசமாக, நான் சிறந்த இயக்குனர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் ஆகியோருடன் பணியாற்ற முடிந்தது. அவர்களிடமிருந்து எனக்கு மிகுந்த ஆதரவும், மரியாதையும், அன்பும் கிடைத்தது ” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .

ஆலியா பட்

“புஷ்பா: தி ரைஸ்” என்ற தெலுங்குப் படத்திற்காக அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், சிறந்த நடிகைக்கான விருதை “கங்குபாய் கதைவாடி” மற்றும் “மிமி” ஆகிய இந்தி படங்களுக்காக ஆலியா மற்றும் கிருத்தி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். இந்த மூன்று நடிகர்களுக்கும் கிடைத்த முதல் தேசிய விருது இதுவாகும்.

தேசிய விருது பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது . இந்த அங்கீகாரத்தை எனக்கு தந்ததுக்கு நடுவர் மன்றம், அமைச்சகம், இந்திய அரசு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விருது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, நம் சினிமாவை ஆதரித்த மற்றும் போற்றிய அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. நன்றி, இயக்குனர் சுகுமார் அவர்களே. என் சாதனைக்கு நீங்கள் தான் காரணம்” என X இல் பதிவிட்டுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன் .

கணவர் ரன்பீர் கபூருடன் தனது திருமண புடவை உடுத்தி விழாவில் கலந்து கொண்ட நடிகை ஆலியா, தனக்கு இந்த விருது கிடைக்க பெரிதும் உழைத்த கலைஞர்களுக்கும் தனது கணவர் ரன்வீருக்கும் நன்றியை தெரிவித்தார் .

ஸ்ரேயா கோசல்

நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளர் ஆர் மாதவன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளிப் பொறியாளரான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றார்.

‘மிமி” படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற நடிகர் பங்கஜ் திரிபாதி, இந்த வெற்றி “தனி சிறப்பு வாய்தது ” என்று கூறினார்.

நான் மகிழ்ச்சியாகஇருக்கிறேன். நேர்மையுடன் நிலைத்திருந்தால் எல்லாம் சாத்தியம். இது எனக்கு இரண்டாவது தேசிய விருது. என்னை தேர்வு செய்த அனைத்து பார்வையாளர்களுக்கும், எனது இயக்குனர்களுக்கும், நடுவர் குழுவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று விழா மேடையில் பேசினார் .

Shrishti Lkhera

“இரவின் நிழல்” படத்திற்காக “மாயவ சாயவா” பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகர் விருது கிடைத்தது. “RRR” திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது, இதில் “கொமுரம் பீமுதோ” பாடலுக்காக காலபைரவா சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருதினை வென்றார்.

நடுவர் மன்றம் 28 மொழிகளில் 280 திரைப்படங்களை தேசிய விருதுக்கான உள்ளீடுகளாகப் பெற்றது , மேலும் “ஏக் தா காவ்ன்” திரைப்படத்திற்காக தயாரிப்பாளர்-இயக்குனர் ஷ்ரிஷ்டி ல்கேராவுக்கு பரிசு வழங்கப்பட்டது,என்பது குறிப்பிடத்தக்கது .

Share This Article
Leave a review