தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறிள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் தற்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பிரிவினருக்கு வரும் 5 முதல் 9ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெற்ற அலுவலர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி அளிப்பார்கள். இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் தேர்தல் கமிஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டில்லியில் தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டின் சார்பில் நானும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கியத் துவம் பெற்ற மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் காவல்துறை தலைமை இயக்குநர் அல்லது காவல்துறை கூடுதல் இயக்குநர் நிலையிலான அய்பிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல்கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதும், அடுத்தகட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்பற்றி அதிமுக சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டி யலின்படி புதிதாக வாக்காளர் களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரை வில் பதிவு அஞ்சலில் அனுப்பப் படும். புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் மனு செய்யலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாள் முன்பு வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.