Mudumalai : யானைகள் வளர்ப்பு முகாமிற்குள் நுழைந்த மக்னா காட்டு யானையால் பரபரப்பு – அச்சத்தில் ஓடியே சுற்றுலா பயணிகள்..!

1 Min Read

நீலகிரி மாவட்டம், அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் மூன்று குட்டிகள் உட்பட 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

தினசரி நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், வளர்ப்பு யானைகளுக்கு உணவு அளிப்பது வழக்கம். இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

யானைகள் வளர்ப்பு முகாமிற்குள் நுழைந்த மக்னா காட்டு யானையால் பரபரப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு அளிப்பதை காண அனுமதிக்கப்பட்ட நிலையில்,

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறி யானைகள் முகாமிற்குள் மக்னா காட்டு யானை ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யானைகள் வளர்ப்பு முகாமிற்குள் நுழைந்த மக்னா காட்டு யானையால் பரபரப்பு

சுற்றுலா பயணிகள் அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடிய நிலையில், முகாமில் இருந்த பழங்குடியினர் யானை பாகன்கள், மக்னா காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர்.

இதனால் யானை அங்கிருந்து விரட்டியதால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் முதுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review