என்ன அமைச்சரே திரும்பவுமா.? மீண்டும் பொங்கிய பொன்முடி.! இதுக்கு எண்டே இல்லையா.?

2 Min Read
படிவத்தை வீசும் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

கடந்த மாதம் சரியாக குடிநீர் வரவில்லை என கூறிய தொகுதி மக்களிடம், நீங்கள் அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க என அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையை கிளப்பியது.
பெண்களிடம் ஓசி ஓசி என்று அவர்கள் பயணத்தை நக்கல் செய்வதும் அவருக்கு வழக்கமான ஒன்று அது அனைவரும் அறிந்ததே. பின்பு கலோகியலாக பேசினேன் என்று வருத்தம் தெறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று,தற்போது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது செயல் அமைந்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

படிவத்தை தூக்கி எறிந்த அமைச்சர்:

திமுகவில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.


இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் பல்வேறு இடங்களில் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சைலோம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவர் சென்றார்.

அமைச்சர் பொன்முடி

இந்த நிகழ்வின்போது புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது.


ஆனால் அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களே பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடி இடம் வழங்கி உள்ளனர்.


இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த படிவத்தை தூக்கி அவர்களது முகத்திலேயே எறிந்து ஆவேசமாக பேசினார்.
இதனால் நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு நிலவியது.

அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்:

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நான்கு மாதங்களாக ரேஷனில் தரமற்ற அரசி வழங்கப்படுவதாக கூறி அவர்கள் முறையிட்டனர்.


இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அமைச்சர் பொமுடி அங்கிருந்து புறப்பட்டார்.

இப்படியே மக்களையும் கழக உறுப்பினர்களையும் தரம் தாழ்த்தி பேசுவது அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இதை உடனடியாக குறைக்க வேண்டும் இல்லையேல் வரும் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள் என்று சொகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்க்கு பின்பாவது திருந்துவாரா அமைச்சர் பொன்முடி?

Share This Article
Leave a review