மகா சிவராத்திரி : நள்ளிரவில் சுடுகாட்டில் மயான கொள்ளை – மனித எலும்பை வாயில் கவ்வி ஆக்ரோஷ வழிபாடு..!

2 Min Read

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

நள்ளிரவில் சுடுகாட்டில் மயான கொள்ளை

கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம்.

சொக்கம்புதூர் மயானத்தில் களி மண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது.

மனித எலும்பை வாயில் கவ்வி ஆக்ரோஷ வழிபாடு

அப்போது கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மாசாணியம்மனின் களி மண் உருவத்தை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடியபடி பூஜை செய்தார்.

இதை தொடர்ந்து மாசாணியம்மனின் இருதயத்தியில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து, அதில் இருந்து மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்தபடி மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி ஈடுபட பக்தர்கள் ஆரவாரத்துடன் மாயன கொள்ளை நிகழ்ச்சியை நள்ளிரவில் கண்டு பரவசம் அடைந்தனர்.

மனித எலும்பை வாயில் கவ்வி ஆக்ரோஷ வழிபாடு

பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூரில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கு அந்த மண்ணை வைத்து பூஜை செய்தனர். அது நள்ளிரவில் நடைபெறும்.

நள்ளிரவில் சுடுகாட்டில் மயான கொள்ளை

இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கை. இதேபோன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு பூசைகளானது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் சுடுகாட்டில் மயான கொள்ளை

இந்த நிகழ்வில் சொக்கம்புதூர் ஆனந்த், மதன், பால்ராஜ், கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review