மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்..!

3 Min Read

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்த போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மக்களவை தேர்தல்

543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

80 மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசம் மக்களவை தேர்தல் வெற்றியை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் உ.பி.யில் பாஜக 70+ இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறிய நிலையில்,

அங்கே சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி பாஜகவுக்கு கடும் சவால் விடுத்து வருகிறது. தேர்தல் ஆணைய இணையத்தில் 11.45 மணிக்கு பகிரப்பட்ட தகவலின்படி உ.பி.யில் சமாஜ்வாதி காங்கிர கூட்டணி 43 இடங்களிலும், பாஜக 34 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

பாஜக கூட்டணி

இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யில் பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கூட டெல்லி, பிஹார், உத்தராகண்ட், மத்தியப்பிரதேசம் என இந்தி இதய மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான போக்கே நிலவுகிறது.

மேற்குவங்கத்தில் திரிணமூல் பாஜக இடையே கடும் சவால் நீடிக்கிறது. உ.பி.க்கு அடுத்தபடியாக இண்டியா கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

அங்கு மொத்தம் 48 மக்களவை தொகுதிகள். கடந்த 2019-ல் இங்கு 41 தொகுதிகளில் பாஜக – சிவசேனா கட்சி பிடித்தது. அதன் பின்னர் நடந்த சலசலப்புகளில் சிவ சேனா இரண்டாக உடைந்தது.

இந்தியா கூட்டணி

இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து இண்டியா கூட்டணிக்கு சாதகமான போக்கு நிலவுகிறது. பகல் 12 மணி நிலவரப்படி;-

காங்கிரஸ் – 11
பாஜக – 11
சிவ சேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) – 11
தேசியவாத காங்கிரஸ் – சரத்பவார் – 8
சிவ சேனா (ஷிண்டே) – 5
என்சிபி – 1
சுயேட்சை- 1

என்று முன்னிலை நிலவரம் இருக்கின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இந்தமுறையும் பாஜக தனித்து கால்பதிக்க முடியவில்லை. கேரளாவில் பாஜக கணக்கை தொடங்கும் என்பது போல் திரிச்சூரில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை வகிக்கிறார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்த பாஜக, சட்டப்பேரவை, மக்களவை என இரண்டு தேர்தல்களிலும் முன்னிலை வகிக்கிறது. கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டது.

இதில் பாஜக கூட்டணி 17 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை.

மோடி , ராகுல் காந்தி

441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

Share This Article
Leave a review