குறுவை நெல் ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

2 Min Read
மழையில் நனைந்து சேதம்

நாகை மாவட்டத்தில்ஒரத்தூர், அகர ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்த கன மழை காரணமாக ஒரத்தூர், அகரஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்ஆயிரம் மூட்டைக்கு மேல் மழையில் நனைந்து சேதம் உடனடியாக தங்கள் பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதோடு 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.

- Advertisement -
Ad imageAd image
சேதம்

பயிரை காப்பற்றினர்

விவசாயம் தான் பிரதான தொழில் நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு காலத்தோடு திறந்துவிடப்பட்ட காவிரி நீர் காரணமாக மகிழ்ச்சியோடு சாகுபடி தொடங்கிய விவசாயிகளுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை அடுத்த சில நாட்களிலேயே துயரம் காத்திருந்தது மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை வரை சீராக வந்து சேராத காரணத்தால் குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்க தொடங்கியது தண்ணீர் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் விவசாயிகள் நடத்திய நிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து அவர்கள் டீசல் இன்ஜின் வாடகைக்கு எடுத்து கூடுதல் செலவு செய்து குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து குறுவைப் பயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மழையில் நனைந்து சேதம்

இதனால் அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை வரை கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 முட்டை வரையே தண்ணீர் இல்லாத காரணத்தால் அறுவடையில் கிடைத்ததாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் போராடி விவசாயம் செய்து அறுவடை செய்த நெல் தற்போது பெய்து வரும் மழையில் நனைந்து சேதானதுதான் அதிர்ச்சி.

மழை

ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு காலத்தோடு நேரடி நெல் கொள்முதல் திறக்க வேண்டும் என கடந்த நாட்களில் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஒரத்தூர், வேர்க்குடி, அகர ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் ஆயிரம் மூட்டை குருவை நெல்கள் நனைந்து பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இனியாவது தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதோடு 22 சதவீதம் ஈரப்பதத்துடன் குருவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இல்லையென்றால் விவசாயம் செய்வதே கடினம் என்கிறார்கள் அந்த பகுதி விவசாயிகள்.திறக்குமா தமிழக அரசு.

Share This Article
Leave a review