காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காழிமேடு பகுதியில் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா கொலை.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காழிமேடு பகுதியை சேர்ந்த வசூல் ராஜா. ரவுடி ராஜா மீது 4 கொலை உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் இன்று காலை வசூல் ராஜா காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருக்காழிமேடு ரேஷன் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து நாட்டு குண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .
வெடிகுண்டு சத்தம்கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் , இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் .
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் ” ஆரம்ப காலங்களில் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ராஜா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை கொலை வழக்கு மூலம் காஞ்சிபுரம் பகுதியில் பிரபலமானார் . தற்போது வசூல் ராஜா மீது 4 கொலை வழக்குகள் , கொள்ளை ஆள்கடத்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது” . என்று தெரிவித்தனர் .
மேலும் எந்த நேரம் வேண்டுமானாலும் போலீஸ் என்கவுண்டர் தன் மீது பாயலாம் என்று அஞ்சிய ரவுடி ராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருந்தி வாழ முடிவெடுத்து காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு கடிதம் தாக்கல் செய்துவிட்டு . எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தான் இன்று காலை ரவுடி ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார் . கொலைக்கான காரணம் மற்றும் இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய காஞ்சிபுரம் ADSP தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .