புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காவலரை தரையில் படுக்க வைத்து சிகிச்சை – ஐ.ஆர்.பி.என் காவலர்கள் வேதனை..!

2 Min Read

புதுச்சேரியில் காய்ச்சலுகாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ஐ.ஆர்.பி.என் ஏட்டை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்த சம்பவம் சக ஐ.ஆர்.பி.என் காவலர்கள் இடையே வேதனையை எற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி மாநிலம், அடுத்த லாஸ்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் வயது (37). ஐ.ஆர்.பி.என் காவல் பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் இவருக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்து வந்ததால், வீட்டிலே அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு அதிக நாட்களாக காய்ச்சல் இருந்ததால் படிப்படியாக காய்ச்சல் அதிகரித்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.

ஐ.ஆர்.பி.என் ஏட்டை தரையில் படுக்க வைத்து சிகிச்சை

அப்போது அவர் உள் நோயாளிகள் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக படுக்கை அளித்து குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெங்கு பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே காய்ச்சல் சற்று குறைவானதால் அவரை பொது வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். அங்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் அவரை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் அமர்நாத் அரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் புகைப்படம் எடுத்து ஐ.ஆர்.பி.என் காவலர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டது.

பொது வார்டில் படுக்கைகள் பற்றாக்குறை

அதனை வாட்ஸ்அப் குழுக்களில் பார்த்த அரசு ஐ.ஆர்.பி.என் காவலர்கள் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரியிடம் அமர்நாத்துக்கு படுக்கை ஒதுக்குமாறு முறையிட்டுள்ளனர். அதற்கு அவர் காய்ச்சலுக்காக பல நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வருவதால், படுக்கை பற்றாக்குறை உள்ளது. இதனால் கடும் காய்ச்சலில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பிறகு அவர்களும் பொது வார்டில் தான் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் பொது வார்டில் படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளது என்றார்கள்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதுபோன்று காய்ச்சலுகாக சிகிச்சை தரையில் படுக்க வைப்பது இயல்பு தான் என்று உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். இதனை கேட்ட ஐ.ஆர்.பி.என் காவலர்கள் தங்களுக்கே இந்த நிலைமை என வேதனையில் சென்றனர்.

Share This Article
Leave a review