துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் விமானங்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலால் டி.ஆர்.ஐ தனிப்படையினர் சோதனை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே தீவிரமாக கண்காணித்தனர். இதில் பெண் ஒப்பந்த ஊழியர்களும் தப்பவில்லை.
இந்த நிலையில் சென்னை விமான நிலைய ஒப்பந்த உயிர்களான சினேகா வயது 30 சங்கீதா வயது 28 ஆகிய இரண்டு பேர் மீது சந்தேகம் ஏற்படவே பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டவர்களை ரகசியமாக பின் தொடர்ந்தனர். ஒருவர் வீடு பல்லாவரத்திலும் மற்றொரு வீடு குரோம்பேட்டையிலும் இருந்தன. அவர்கள் வீட்டுக்கு சென்றதும் இரு குழுக்களாக அதிகாரிகள் அவர்களது வீடுகளில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். குளியலறை மற்றும் பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள், தங்க உருநிலைகள், தங்க பசைகள் போன்றவைகளை கைப்பற்றினார். இருவர் வீடுகளிலும் இருந்து மொத்தம் 4. 7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதை அடுத்து இரண்டு பெண்களிடமும் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள் கடத்தி வரும் தங்கத்தை ரகசியமாக இவர்கள் வாங்கி தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து சுங்க சோதனை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அதன் பின்பு கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் வந்து தங்கத்தை வாங்கிச் செல்வார்கள் என்று தெரிந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இந்த பெண்களிடம் இருந்து தங்கத்தை வாங்கி செல்வதற்காக ஒருவர் அவர்கள் வீடுகளுக்கு வந்தார். அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகம்மது அர்ஷத் வயது 27 என்பதும், சென்னை மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் வயது 30 வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதை அடுத்து அதிகாரிகள் இரு பெண்கள் உட்பட மூன்று பேரை கலையரசன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அங்கு 1.5 கிலோ தங்கம் இந்திய பணம் 45 லட்சம் அமெரிக்க டாலர் 5 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் தான் தங்க கடத்தும் ஆசாமிகளே அந்த பெண்களும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதை எடுத்து 2 பெண்கள் உட்பட 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களை சென்னை தியாகராய நகரில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி, 4.5 கோடி மதிப்புடைய 7.2 கிலோ தங்கம் 50 லட்சம் மதிப்புடைய வெளிநாடு மற்றும் இந்திய பணம் மொத்தம் 5 கோடி மதிப்புடைய தங்கம், பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விமான நிலைய பெண் ஊழியர்கள் இரண்டு பேர் ஆண் ஊழியர் ஒருவர் பிரபல கடத்தல் ஆசாமி ஒருவர் ஆகிய நான்கு பேரை சங்கிலித்தொடர்போல் அதிரடியாக கைது செய்துள்ளனர்.