ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இரண்டாம் இடத்தை பிடித்தார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் ஐயூஎம்எல் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிட்டார். இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி முன்னிலை வகித்து வருகிறார்.