குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க செல்ல முயன்ற மீனவர் பொழிமுகப்பகுதியில் தவறிவிழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரதிஷ் மீனவரான இவருக்கு சொந்தமாக பைபர் படகு உள்ளது, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அருகே இருக்கும் பொழிமுகப்பகுதியில் தனது படகை நிறுத்திவைத்திருந்தார் .
நேற்று காலை வழக்கம் போல் பிரதிஷ் மற்ற மீனவர்களுடன் மீன் பிடிக்க தனது பைபர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றார் .
அவரது பைபர் படகு சிறிது தூரம் கடலுக்குள் சென்ற பின்னர் பிரதிஷ் எதிர்பாராத விதமாக பொழிமுக கடல் பகுதியில் தவறிவிழுந்து மாயமாகி உள்ளார்.
இதை கண்ட அவரது கிராமத்தை சேர்ந்த சக மீனவர்கள் கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்திலிருக்கும் மீனவர்களை உதவிக்கு அழைத்தனர். இதனை கேட்டு அருகில் வலைகளை பழுது பார்த்து கொண்டிருந்த அவரது கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பதறிய நிலையில் ஓடி வந்து கடலுக்குள் மூழிகிய பிரதீஷை தேடும் பணியில் ஈடுபட்டனர் .
பல மணி நேரம் தேடிய பிறகு பிரதிஷ் மயக்க நிலையில் மீட்கப்பட்டார் . மேலும் அவரை சிகிச்சைக்காக தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் . தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மயக்க நிலையில் இருந்த பிரதிஷின் உடலை பரிசோதித்து பார்த்ததில் , அவர் ஏற்கனவே இறந்ததுள்ளது தெரிய வந்ததது .
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் பிரதீஷ் இறந்த தகவலை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல் துறையினருக்கு தெரிவித்தனர் .
மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் , நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்க செல்லும்போது மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் மீனவ கிராம மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .