கனடாவில் தீ விபத்து – இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி, மகள் உயிரிழப்பு..!

2 Min Read

கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவரது மகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்போது தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

கனடா நாட்டில் உள்ள டொரன்டோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர்.

கனடாவில் தீ விபத்து

அப்போது நீண்ட நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதை அடுத்து தீயில் கருகி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டனர். அப்போது போலீசார் விசாரணையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜீவ் வாரிக்கோ வயது (51), அவரது மனைவி ஷில்பா கோதா வயது (47) மற்றும் அவரது மகள் மாஹெக் வாரிக்கோ வயது (16) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் வாரிக்கோ கனடா நாட்டில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தீயணைப்பு படையினர்

அப்போது தீ விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்துக்கு ஏதும் சதிச்செயல் இருக்குமோ என்ற பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 நபர்களைக் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய வம்சாவளி தம்பதி, மகள் உயிரிழப்பு

அதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் சுஜித், அவரது மனைவி அலைஸ் ப்ரியங்கா, மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தான் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review