இந்த டிஜிட்டல் யுகத்தில் போலி செய்திகளின் ஆபத்துகளை தவறான தகவல்கள் சமூகங்களுக்கு இடையே பதட்டங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. இதனால் ஜனநாயக மதிப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். ஒரு நாடு நிலைத்திருக்க வேண்டுமானால் பத்திரிகைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் .
ஊடக விசாரணைகளின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றங்கள் கண்டறிவதற்கு முன்பே ஊடகங்கள் பொதுமக்களின் பார்வையில் குற்றவாளியாக ஆக்கிய சந்தர்ப்பங்கள் உண்டு என்றார்.
தற்போதைய சமூகத்தில் பத்திரிகைகளின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கு போலிச் செய்திகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த நிகழ்வுகளைப் புகாரளிக்கும் செயல்பாட்டிலிருந்து சார்பு அல்லது தப்பெண்ணத்தின் எந்தவொரு கூறுகளையும் களைவது பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் கூட்டுப் பொறுப்பாகும்.

பொறுப்புள்ள இதழியல் என்பது ஜனநாயகத்தை ஒரு சிறந்த நாளை நோக்கி நகர்த்தும் இயந்திரம். டிஜிட்டல் யுகத்தில், பத்திரிகையாளர்கள் தங்கள் அறிக்கையிடலில் துல்லியமாகவும், பாரபட்சமின்றி, பொறுப்புடனும், அச்சமின்றியும் இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏ.ஐ. எனப்படும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த கலந்துரையாடலில், தமிழக அரசு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது;-
உலகையே மாற்றிக் கொண்டிருக்கும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 100 பேர் செய்யக்கூடிய வேலையை ஒருவரால் செய்ய முடியும். இதனால், பலர் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏ.ஐ. தொழில்நுட்பம் வாயிலாக, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

அதன் வாயிலாக, புதிய தொழில்களை துவங்குவதற்கான சூழலை, தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஐ. உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில், மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னணியில் உள்ளது. ‘டீப் பேக்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் ஏராளமான போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. இது, ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
எந்த ஒரு செய்தி கிடைத்தாலும், அது உண்மை தானா, செய்தி எங்கிருந்து வந்தது என்பதை உறுதி செய்த பின்னரே, அதை நம்ப வேண்டும். மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இல்லையெனில், சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் தரவுகளை திரட்டுவதில், ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் முனைவோருக்கான தரவுகளை, தமிழில் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.