விழுப்புரம் சண்முகபுரம் காலனியிலுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

1 Min Read
அமலாக்கத்துறை சோதனை

விழுப்புரம் : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கில், வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாமியார் பெயரில் சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது.

- Advertisement -
Ad imageAd image
அமைச்சர் பொன்முடி வீடு

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறையில் அளவுக்கு மீறி செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதனால் அரசுக்கு ரூபாய் 28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த வழக்கை சுட்டிக்காட்டி எப்போது வேண்டுமானாலும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாகத்துறை சோதனை நடக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அந்நிய செலவாணி வழக்கில் கௌதமசிகாமணி எம் பியின் பல கோடி பணம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல்.

Share This Article
Leave a review