41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தில் துளையிடும் பணிகள் தீவிரம்..!

3 Min Read

உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர் காசி மாவட்டத்தில் சில்க்யாரா – பர்க்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப்பாதை கடந்த 12ஆம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் களத்தில் இறங்கினார். தொழிலாளர்களை பத்திரமாக மீட்க பல திட்டங்கள் ஆராயப்பட்ட நிலையில் இடிபாடுகளில் கிடைமட்டாக துளையிட்டு அதனுள் குழாயை செலுத்தி தொழிலாளர்களை மீட்க முடிவு எடுக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இதற்காக ராட்சத எந்திரங்கள் வரவேற்கப்பட்டு இடிபாடுகளின் பக்கவாட்டில் துளையிடப்பட்டன. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு எந்திரங்கள் பழுதாகின. தொடர்ந்து அமெரிக்க தயாரிப்பு ஆகர் எந்திரம் கொண்டு துளையிடும் பணிகள் தொடங்கின. இதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இடுப்பாடுகளுக்குள் இருந்து எதிர்ப்படும் இடையர்களால் துளையிடும் பணி இடை இடையே நிறுத்தப்பட்டாலும் மீட்பு குழுவினர் முழு நம்பிக்கையுடன் மீட்பு பணிகளை தொடர்ந்தனர். இதன் மூலம் 57 மீட்டர் நீளமுள்ள இடிப்பாடு பகுதியில் கிட்டதட்ட 47 மீட்டர் தூரத்துக்கு துளையிடப்பட்டு அதனுள் இரும்பு குழாய் செலுத்தப்பட்டது.

உதவியுடன் ராணுவத்தின் பணிகள் தீவிரம்

இதனால் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவிலையே தொழிலாளர்கள் மீட்க பட்டு விடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிபாடுகளில் துளையிடும் ஆகர் எந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இடிபாடுகளுக்கு சிக்கிக் கொண்டன. இது மீட்பு பணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆகர் எந்திரம் பழுதடைந்து விட்டதால் இனி அதை கொண்டு தொலையிடுவது சாத்தியம் இல்லை என்பதால் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மீட்பு குழுக்கள் தள்ளப்பட்டுள்ளன. அதன்படி இடிபாடுகளில் சிக்கியிருக்கும் ஆகர் எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுத்த பிறகு எஞ்சியுள்ள 10- 12 மீட்டர் தூரத்திலான இடிபாடுகளை ஆட்கள் மூலம் துளையிட ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஆகர் எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுக்க பிளாஸ்மா கட்டர் என்கிற நவீன எந்திரம் ஐதராபாத்தில் இருந்து நேற்று வரவைக்கப்பட்டது. அந்த எந்திரத்தை பயன்படுத்தி இடிபாடுகளில் இருந்து ஆகர் எந்திரத்தின் பிளேடுகளை முழுமையாக வெளியே எடுக்கும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கிடையில் மாற்று முயற்சியாக சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் இருந்து அடிப்பாகம் வரை செங்குத்தாக தொலைவிடும் பணியில் மீட்பு குழுக்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி இருந்தாலும், அது 2-வது தேர்வாக கருதப்பட்டதால் பணிகள் மிதமான வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது அந்த பணிகள் வேகமெடுத்துள்ளன. இது குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அதிகாரிகள் கூறுகையில்;

41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தில் துளையிடும் பணிகள் தீவிரம்

செங்குத்தாக தொலையிடும் பணிகள் தொடங்கியுள்ளன. இதிலும் சிக்கல்கள் உள்ளன. சுரங்கப்பாதையில் உட்பகுதியில் மண் சரிவு ஏற்படாத வகையில் துளையிட வேண்டும். தொழிலாளர்களை அடைய மேலிலிருந்து அடிப்பாகம் வரை 86 மீட்டர் ஆழத்துக்கு துளையிட வேண்டும். ஏற்கனவே 15 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது. எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றால் கிட்டதட்ட 100 மணி நேரத்தில் துளையிடும் பணி நிறைவு பெறும் என்றனர். இதனிடையே மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அங்கு ராணுவம் களமிறங்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் பொறியாளர் குழுவான மெட்ராஸ் சாப்பர்சின் ஒரு பிரிவு நேற்று அங்கு சென்றடைந்தது.

Share This Article
Leave a review