புயல் கனமழை காரணமாக சென்னையில் தண்ணீர் தேங்கியது. தொடர்பாக நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் மழை நீர் வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது. சென்னை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தயவுசெய்து வெளியில் வந்து சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்து விடாதீர்கள். வந்து உதவுங்கள் என்று கூறியிருந்தார். அவரது வீடியோவுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாக;

2015ல் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லி இருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைதட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயமில்லை. இந்த பேரிடர் 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழை நீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அதனால் தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழை நீர் கால்வாய்கள் மூலம் தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழை நீர் எல்லாம் வெளியேறியது. இப்போது பெய்துள்ள பெரும் மழை 2015 ஆம் ஆண்டு விட அதிகம் வரலாறு காணாத மழை புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால் தான் மழை நீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது.

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 259 பேர் பலியானார்கள் 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கினார். அப்படியான நிலையா இப்போது ஏற்பட்டு இருக்கிறது. இன்று முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் ஆறு லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கி இருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கும் மற்றும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும் தான் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் களத்தில் நின்று அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதும் இருந்தால் தெரிவிக்கவும் அரசு நிறைவேற்றி தரும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.