தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த uள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகனான நான், எனது திருமண பத்திரிகையான தோனியின் படத்தை வைத்தேன். அப்போது இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள் உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது இவர் கிரிக்கெட் பிளேயர் தோனியின் தீவிர ரசிகர் ஆவர். இவர் சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றியவர்.

இவர் வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் இவரது வீட்டை வந்து பார்த்து செல்வது வழக்கம். இவ்வாறு தோனியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார். ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தின் போது, தோனிவிடம் செல்பி எடுத்தேன். பின்னர் தோனியின் மிகப்பேரிய தீவிர ரசிகன் நான். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் கோபி கிருஷ்ணன் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் உடலை கைப்பற்றி ராமநத்தம் போலீசாரிடம் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்று இரவு கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும், அதோ ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. அப்போது கோபி கிருஷ்ணனுக்கும், அதோ ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விளையாட்டு போட்டியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோபி கிருஷ்ணன் அதிகாலை வீட்டில் மின் விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.