யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

1 Min Read

தனியார் யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை வரும் 31 ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோரின் ஜாமீன் மனு வருகின்ற 27 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வழக்கில் மற்றொரு நபராக தனியார் யூடியூபர் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

இந்த நிலையில் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

கோவை நீதிமன்றம்

இந்த நிலையில் இன்று மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு அவரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் வருகின்ற 31 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review