அம்பானிக்கோ,அதானிக்கோ அல்லது கார்பரேட் கம்பனிகளுக்கோ தாரைவார்ப்பது என்பது நிர்வாகம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள்
காரைக்கால் மார்க் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு தாரைவார்த்த மத்திய அரசை கண்டித்து
மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காரைக்காலில் துறைமுகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தனியார் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதை கண்டித்தும்,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும், இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும் காரைக்கால் மக்களின் வேலை வாய்ப்பிற்காகவும்
காரைக்காலில் தனியார் துறைமுகம் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கி செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இத்துறைமுகத்தில்,
ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு நில்லாமல்
நிலக்கரி துகள்கள் பறந்து துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றில் பரவுவதோடு
அங்கு சுற்றி வாழும் மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட
பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் வெகு நாட்க்களாக வலியுறுத்திக்கொண்டு வருகின்றனர்.

இதற்க்கு சரியான விடியல் கிட்டாததால், துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதை கண்டித்தும்
அதை தடை செய்ய வலியுறுத்தியும், துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும்
துறைமுக வாயிலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரஞ்சித்,
உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஜோஷ்வா, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சந்திரமோகன்,
உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது திடீரென துறைமுகத்தில் நுழைய காங்கிரஸ் கட்சியினர் முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் ஒரு பக்கம் இருக்க,
அனைத்தையும் அம்பானிக்கோ, அதானிக்கோ அல்லது கார்பரேட் கம்பனிகளுக்கோ தாரைவார்ப்பது என்பது
நிர்வாகம் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள் செய்யும் வேலையாகும்.

ஒன்றை பன் மடங்காக்கி மக்களுக்கு தங்கு தடையின்றி தர வேண்டுமே தவிர,
இருக்கும் ஒன்றை விற்று பாக்கெட்டில் போட்டுக் கொள்ளக் கூடாது என்று மக்கள் விமர்சிக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.