- பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை ரத்து செய்யக்கோரி வழக்கு.
வருவாய் துறை விசாரணை செய்து கோவில் நிலத்தில் தனி நபர்கள் பட்டா பெற்று இருந்தால்அதனை ரத்து செய்வதற்கான உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியை சேர்ந்த சிவசிங் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானமிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.
இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள், நிலம் உள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரி பகுதியில் கோவில்களுக்கான மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் தயாரிப்பதற்காக தனியார் மருத்துவமனை அருகில் இடம் இருந்தது. கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை கன்னியாகுமரியை சேர்ந்த பலர் ஆக்கிரமித்து கடைகளை கட்டினர்.
பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை சட்டவிரோதமாக தங்களின் பெயரில் பதிந்து கொண்டு தற்போது இவர்கள் தங்களது பெயர்களில் பட்டாவும் பெற்றுள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மோசடியாக தனியார் சிலர் பட்டா போட்டதை ரத்து செய்யக்கோரியும் இந்த இடங்களை மீண்டும் கோவிலின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரியும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே கன்னியாகுமரி பேராஊட்சி , அகஸ்தீஸ்வரர் பகுதியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனி நபர்களின் பெயரிலான பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முகமது சபீக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுல் கலாம் ஆஜராகி சம்பந்தப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் இந்த இடத்தில் முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர் இதனை ரத்து செய்யக்கோரி இந்து சமய துறையின் இணை ஆணையர் கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்ட வருவாய் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அந்த கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/higher-education-minister-kovi-chezhian-held-a-press-conference-in-thanjavur/
இதனைத் தொடர்ந்து நீதிபதி கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ள நபர்களுக்கு உரிய விதிகளை பின்பற்றி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் விசாரணை செய்து கோவில் நிலத்தில் தனி நபர்கள் பட்டா பெற்று இருந்தால்
அதனை ரத்து செய்வதற்கான உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.