அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கிறது.
இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் தேமுதிக, அதிமுக மற்றும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 20 நாட்கள் தொடர்ச்சியாக சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோட்டில் நாளை பிரசாரம் செய்கிறார். இதேபோல 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலத்திலும், 31 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரத்திலும், ஏப்ரல் 1 ஆம் தேதி பெரம்பலூர்,
புதுக்கோட்டை, திருச்சியிலும், 2 ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணத்திலும், 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் வாக்கு சேகரிக்கிறார்.

மேலும் 5 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னையிலும், 7 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கடலூரிலும், 9 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூரிலும், 11 ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியிலும், 12 ஆம் தேதி ராமநாதபுரம்,

சிவகங்கை, திண்டுக்கல்லிலும், 13 ஆம் தேதி கரூர், நாமக்கல், தேனியிலும், 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகரிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.