சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா..!

1 Min Read
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்

கோவை மாவட்டத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

கோவையில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் கை, உடலில் கீறி அம்மன் அழைப்பு வழிபாடு செய்தனர். கோவை டவுன்ஹால் அருகே ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்கு வரும் மக்கள் பக்தர்கள் தங்கள் கை, உடலில் கீறி, கத்தி போடும் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் வழிபாடு

கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கி டவுன்ஹால் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி கோவில் வந்து அடைந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.

அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் பக்தர்களின் உடலில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் ஆபார நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் திருவிழாவை பார்த்து பரவசமடைந்த காட்சி

பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவு அடையும். பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசமடைந்தனர்.

 

Share This Article
Leave a review