அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் இனிப்பக கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
அவருக்கு வழங்கிய தேநீர் சூடாக இருந்ததால், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தேனீரை ஆற்றி, சூடு ஆறிய பின் கொடுத்தார். அதனை ருசித்து தமிழக முதல்வர் அருந்தினார்.

தமிழக முதல்வர் தஞ்சை அன்னை சத்யா ஸ்டேடியத்தில் நடைப்பயிற்சி சென்றவாறு வாக்கு சேகரித்தார். அப்போது சாப்பிட்டிங்களா என கேட்ட சிறுவனை முதல்வர் தட்டிக் கொடுத்தார்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் முரசொலி போட்டியிடுகிறார். தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கி இருக்கும் முதல்வர் டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து அன்னை சத்யா ஸ்டேடியத்தில் இரண்டு கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள், விளையாட்டு வீரர், வீரர்ங்கனைகளிடம் வாக்கு சேகரித்தார். அவர்கள் முதல்வர் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
ஹாக்கி விளையாடி கொண்டு இருந்த ஒரு சிறுவன் முதல்வரை சாப்பிட்டிங்களா என கேட்டான் அவர் சிரித்துக் கொண்டே சிறுவனை தட்டி கொடுத்தார். தொடர்ந்து. தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் வியாபாரிகள் பொதுமக்களிடம் முதல்வர் வாக்கு சேகரித்தார்.